Posts

Showing posts from September, 2025

சேரும் சேறு !

Image
  சேரும் சேறு ! ஆற்றிலிருந்துத் தோண்டி எடுத்தச்   சேற்றுக் களிமண் கவளத்தைப்   பற்றுடன் கையால் உருட்டிப் பற்றிப் பிடித்தோம் ஆனைமுகனை ! போற்றிப் பாடி, வணங்கினோம் ! சாற்றினோம், அவன் நற்பெயரை !  ஏற்றினோம் நல் தீபத்தை !   நற் பண்டங்களைப் படைத்தோம்; உற்றாருடன் பகிர்ந்தோம், வயிறார உண்டுக் கழித்தோம் ! உற்ற நன்னாளில் நம் கணபதியை, அவ்வாற்றுக்கே எடுத்துச் சென்று, நட்டாற்றில் கரைத்தப் போது,  சற்றே மனதில் ரீங்காரித்தது,    மாற்றே இல்லாத அந்த நியதி:   'நம் சேறும், வந்த வழியேச் சேரும் !' -ரா கி (ராதாகிருஷ்ணன்) 31 Aug 2025