சேரும் சேறு !
சேரும் சேறு ! ஆற்றிலிருந்துத் தோண்டி எடுத்தச் சேற்றுக் களிமண் கவளத்தைப் பற்றுடன் கையால் உருட்டிப் பற்றிப் பிடித்தோம் ஆனைமுகனை ! போற்றிப் பாடி, வணங்கினோம் ! சாற்றினோம், அவன் நற்பெயரை ! ஏற்றினோம் நல் தீபத்தை ! நற் பண்டங்களைப் படைத்தோம்; உற்றாருடன் பகிர்ந்தோம், வயிறார உண்டுக் கழித்தோம் ! உற்ற நன்னாளில் நம் கணபதியை, அவ்வாற்றுக்கே எடுத்துச் சென்று, நட்டாற்றில் கரைத்தப் போது, சற்றே மனதில் ரீங்காரித்தது, மாற்றே இல்லாத அந்த நியதி: 'நம் சேறும், வந்த வழியேச் சேரும் !' -ரா கி (ராதாகிருஷ்ணன்) 31 Aug 2025