Posts

Showing posts from August, 2024

நினைவிலைகள்

Image
தூண்டியது ஒரு நினைவலை. சீண்டிப் பார்த்தது மனம். தாண்டியக் கதவிலோ மறதி. தோண்டியப் போது அசதி. மீண்டதுப்   பாதியிலும் பாதி. கண்டதோ நினைவழிவின் துவக்கம் . Picture courtesy statement is given below  சீட்டில் எழுதி ப்  பத்திரபடுத்தியும் , அச்சீட்டு வைத்த இடம் மறந்ததென்ன ! வீட்டைப் பூட்டி இழுத்து இழுத்துப் பார்த்தும் எட்டடியில் ஐயத்துடன் திரும்பியதென்ன ! எட்டிநடையுடன் கடைவீதிக்கு வந்துவிட்டு    எடுத்துவராத வண்டியைத் தேடுவதென்ன !   கண்டப் பழம்பெரும் நண்பனின் கொண்டப் பெயர் பிடிபடாததென்ன ! உண்டபின் உட்கொண்ட   மாத்திரையை மீண்டும் எடுக்க முனைவதென்ன ! மூக்குக்கண்ணாடியை த்  தலைமேல் தள்ளிவிட்டு மூலை முடுக்குகெங்கும் துருவுவதென்ன !   பசுமை நிறைந்த நினைவு அலைகளும் , சுமை ஏற்றும் நினைவுச் சூறாவளிகளும் , காலத்தின் கட்டாயமாக ஒருமி த் ததென்ன ! காலங்கள் காட்சிகள் மாறியதென்ன !   விலைத்தந்து த்  தக்கவைக்க முடியுமா என்ன இலையுதிரில் உதிரும் இந்நினைவு   இலைகளை ? - ராகி (ராதாகிருஷ்ணன்) 7 ஆகஸ்ட் 2024 ...